கவிதையை நேசி நீ மனிதன் ஆவாய், காதலை நேசி நீ கவிஞ்சன் ஆவாய்... (Dj Arthihan)
Search Dj's Blog
This Is Dj Arthihan' இன் கதைத்துளிகள் Web Site Toolbar Click Here & Download that...........
2/04/2010
ஜனனம்
தாயின் கருவறையில் கண்மூடிக்கிடந்தேன்
அவள் கதறிய சத்தத்தில்
உயிர் கொண்டு எழுந்தேன்
மண்ணில் விழுந்தவுடன் எதனை இழந்தேன்
அதனை எண்ணியோ இராப்பகலாய் அழுதேன்
கவிதை
மனக்கருவரையில் பிறந்த குழந்தை
அது கவிதை
உங்களிடம் தவழ்ந்தொடிவந்தால்
அள்ளி எடுத்து முத்தமிடுங்கள்
கைகளால் தட்டிவிடாதீர்கள்
அதன் மழலைக்கு செவி கொடுக்காதீர்கள்
உங்கள் மனதை கொடுங்கள்
புதுமுகம்
வாய்ப்புகள் கிடைக்காத பாரதிகள்
ஆயிரம் இங்குண்டு
எழுதப்படாத சரித்திரங்கள்
மணல்மேட்டில் கிடக்குதிங்கு
சமுதாயமே நாங்கள் வெற்றுக்காகிதங்கள்
அல்ல புரட்டிப்பார் காவியங்கள்
முன்னனுபவம்
காதலித்து பார்த்தேன்
காதல் பிடிக்கிறது
காதலி பிடிக்கவில்லை
திரையரங்கம் பிடித்ததால்
திரையிட்ட படமும் பிடிக்குமா என்ன ?
Subscribe to:
Posts (Atom)