கவிதையை நேசி நீ மனிதன் ஆவாய், காதலை நேசி நீ கவிஞ்சன் ஆவாய்... (Dj Arthihan)
Search Dj's Blog
This Is Dj Arthihan' இன் கதைத்துளிகள் Web Site Toolbar Click Here & Download that...........
2/01/2010
அழகி
உனை பார்க்கையில்
மனதில் ஓர் கவிதை பிறந்தால்சொல்லலாம்
ஓராயிரம் கவிதைகள் பிறக்குதே
எதை நான் என் இதழ்களில் முத்தமிட
உன் அழகோடு போராடி
என் விழிகள் நிமிடம் ஒரு முறை தோற்கின்றன
இப்போராட்டத்தில் நீ புறமுதுகிட்டாலும்
என் விழிகளே தோற்கின்றன
உன் பின்னழகில்
பாரடி
உன் முகம் தெரியவில்லை என்று
என் கை ரோமங்கள் கூட
தலை தூக்கிப்பர்ர்கின்றன
உன் குரலை கேட்கும் ஆசையில்
என் செவிகள் எனது சப்தத்தை கூட ஏற்க மறுக்கின்றன
நிலவின் நிழல் கூட
அழகாய் இருக்கும் என்று
உன் நிழலை பார்த்த பின்புதானடி
நான் தெரிந்து கொண்டேன்
போதுமடி
நான் நானாக இல்லை
என்னை திருப்பிக்கொடு
இல்லையேல் முழுவதுமாய் ஏற்றுக்கொள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment