தனது பேனாவில் மையிட்டு
கவிதை எழுதினான் கவிஞன்
அதில் எழுத்துப்பிழைகள்
அதற்கு கவிஞன் வருத்தப்படலாம்
பேனா வருந்துவதில் அர்த்தமில்லை
இங்கு இறைவனே கவிஞன்
எனை கருவியாய் கொண்டு
அவன் எழுதிய கவிதையே வாழ்க்கை
அதில் எழுத்து பிழைகளாய் சோதனைகள்
அதற்கு அவன் வருந்தட்டும்
இவன் அல்ல
No comments:
Post a Comment